கெய்சர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் !

சோவியத் யூனியன் உருவாகக் காரணமாய் இருந்த ரஷ்யப் புரட்சிக்கு (1917) முன்னர் அந்நிலப்பரப்பு ஜார்(tsar) மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. மன்னர்களின் பட்டப்பெயரான tsar என்ற சொல் caesar என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து மருவி பயன்பாட்டுக்கு வந்தது. ஆங்கிலத்தில் உச்சரிக்கும் போது, நாம் caesar-ஐ சீசர் என்றாலும், லத்தீன் மொழியில் அதன் உச்சரிப்பு கெய்சர் (kaesar) தான். இந்த கெய்சர் எனும் சொல் பண்டைய ரோம் பேரரசை ஆண்ட பேரரசன் ஜூலியஸ் கெய்சர் (Julius … Continue reading கெய்சர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் !

பாண்டியன் வஞ்சினம்

பஞ்ச் டயலாக் என்றதும் நினைவுக்கு வருவது ரஜினி தான். அதிலும் குறிப்பாக அண்ணாமலை படத்தில் அவர் பேசும் வசனம். சரத் பாபுவை நோக்கி “அசோக்..இது வரைக்கும் நீ இந்த அண்ணமலைய நண்பனாத்தான் பாத்திருக்க" என்று தொடங்கி சவால் விடும் காட்சி, பஞ்ச் டயலாக்குகளின் மாஸ்டர் பீஸ். இது போன்ற வசனங்கள் அனைத்து மொழிப் படங்களிலும் உண்டு. சட்டென நினைவுக்கு வருவது, Taken திரைப்படம். தன் மகளைக் கடத்தியவனிடம், லியம் நீசன் கூறும் - “I dont know … Continue reading பாண்டியன் வஞ்சினம்

வாளுடைமை

தேவர் மகன் படத்தில் சக்தி, மாயனிடம் “உனக்குள்ள முழிச்சிட்டு இருக்க அதே மிருகம் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு. அத வீணா எழுப்பிடாத” என்று சொல்வார். நீ செய்கிற அனைத்து தீய செயல்களையும், அக்கிரமங்களையும் என்னால் உனக்குத் திருப்பிச் செய்ய முடியும், ஆனால் அதைச் செய்யாமல் தவிர்க்கிறேன் என்பது தான் அதன் பொருள். அறம் என்பது அதுதான். அசுரன் படத்தில் சிவசாமி தன் மகன் சிதம்பரத்திடம் “அதிகாரத்திற்கு வந்ததுக்கு அப்புறம் அவனுக நமக்கு பண்ணத நீ யாருக்கும் பண்ணாத. … Continue reading வாளுடைமை

கல் பொரு சிறு நுரை

வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனுக்கும் முப்பதுகளில் தன்னை உருமாற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளை வழங்குகிறது என்று நினைக்கிறேன். இன்றைய சூழலில் ஒவ்வொருவரின் சமூக பொருளாதார நிலையைப் பொறுத்து, அந்த வாய்ப்பு ஐந்து பத்து ஆண்டுகள் முன்னரோ பின்னரோ அமையலாம். சராசரி நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மனிதனுக்கு, கல்வி பயின்று, தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டு, குடும்ப வாழ்வில் நுழைந்த பிற்பாடு அந்த வாய்ப்பு பெரும்பாலும் முப்பதுகளில் நிகழ்கிறது.  செய்யும் தொழில், உறவுகள், பொருளாதாரம் சார்ந்து பல சவால்களை நாம் சந்திக்க … Continue reading கல் பொரு சிறு நுரை

டில்லீஸ்வரன்

டில்லீஸ்வரனைப் பற்றி தெரிந்து கொள்ள, முதலில் திருவரங்கம் கோயிலில் உள்ள துலுக்க நாச்சியாரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். டெல்லி, சுல்தான்களின் ஆட்சியின் கீழ் இருந்த போது, அங்கே இருந்த ஒரு சுல்தான் தெற்கு நோக்கிப் படையெடுத்தார். அந்தப் படையெடுப்பின் போது திருவரங்கம் கோயிலைத் தாக்கிய சுல்தானின் படைகள், அங்கே இருந்த பெருமாள் சிலையினை டெல்லிக்கு எடுத்துச் சென்றனர்.  கரம்பனூரைச் சேர்ந்த ஒரு பெண், தினசரி பெருமாளை வணங்கக் கூடிய பழக்கம் உடையவள். இப்படி பெருமாள் சிலையை … Continue reading டில்லீஸ்வரன்

கதார்சிஸ்

ஹ்வாக்கீன் ஃபீனிக்ஸ் (Joaquin Phoneix) ஒரு அற்புதமான கலைஞன். டிகாப்ரியோ, டாம் க்ரூஸ், கிலியன் மர்ஃபி வரிசையில் எனக்கு மிகப்பிடித்தமான நடிகர்களுள் ஒருவர். இத்தனைக்கும் அவர் நடித்த படங்கள் இரண்டை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஒன்று 2000த்தில் வெளியான கிளாடியேட்டர், மற்றொன்று 2019ல் வெளியான ஜோக்கர். இரண்டுமே எதிர்மறையான கதாப்பாத்திரங்கள். அவரது முகஅமைப்பும் உடல்மொழியும், எதிர்மறையான கதாப்பாத்திரங்களுக்கு வெகுவாக ஒத்துப் போகிறது என்று நினைக்கிறேன். அவரது முக அமைப்பில் ஏதோ ஒன்று பழைய நடிகர் ஶ்ரீகாந்தை நினைவுபடுத்தும். இயல்பாகவே … Continue reading கதார்சிஸ்

ஷாருக்கானும் பவா செல்லதுரையும்

ஷாருக்கானின் தொழில் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய “The Inner world of Shahrukh Khan” எனும் டாகுமெண்டரி 2004ல் பிபிசியால் தயாரித்து வெளியிடப்பட்டது. 2010 வாக்கில் முதன் முதலில் அதனைப் பார்த்தேன். இந்த 13 வருடங்களில் அதை பல முறை பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த டாகுமெண்டரிகளில் ஒன்று அது. எதைப் பற்றியும் சட்டை செய்யாத, பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஷாருக்கானின் இயல்புக்காக அது எனக்குப் பிடித்திருந்தாலும், நிஜத்துக்கு மிக அருகே அழைத்துச் சென்ற … Continue reading ஷாருக்கானும் பவா செல்லதுரையும்

கால் முளைத்த பூ !

“மாற்றான்” படத்தின் அருமையான பாடல்களில் ஒன்று கால் முளைத்த பூவே. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மதன் கார்க்கி எழுதிய பாடல். மெட்டு, பாட்டு என்று இரண்டு தளங்களிலும் மிகவும் கடினமான பாடல் இது. ஜாவேத் அலி மற்றும் மகாலட்சுமி பாடிய இப்பாடலை பதிவு செய்ய மூன்று நாட்களானது என்று ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருப்பார். இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளில் ரஷ்யா தொடர்பான சில சொற்களைப் பயன்படுத்தியிருப்பார் கார்க்கி. வால்கா நதி, பேலே நடனம், கேமாமில் பூ … Continue reading கால் முளைத்த பூ !

கிங்ஸ்மேன்- கஷ்மீரியும் பஷ்மீனாவும்

கிங்ஸ்மேன் படங்களில் சீக்ரெட் சர்வீஸ் (2014), கோல்டன் சர்க்கிள் (2017) வரிசையில், 2021ல் “தி கிங்ஸ்மேன்” வெளியானது. இந்தப் படத்தின் கதை, முந்தைய இரு படங்களுக்கும் prequelஆக எடுக்கப்பட்டுள்ளது. கிங்ஸ்மேன் எனும் பிரிட்டிஷ் ரகசிய உளவு அமைப்பு ஏன் உருவானது, அதன் அலுவலகம் ஒரு தையல் கடையில் அமைந்துள்ள பிண்ணனி முதலியவற்றை முதலாம் உலகப் போரின் உண்மை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி முடிந்த அளவு விறுவிறுப்பாக எடுத்துள்ளனர். சில போர்க்கள காட்சிகள், முழுக்க போர் சார்ந்த திரைப்படங்கள் அளவுக்கு … Continue reading கிங்ஸ்மேன்- கஷ்மீரியும் பஷ்மீனாவும்

தலைகீழ் சிந்தனை

எந்த ஒரு பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதற்கும், மனதில் இருக்கும் ஒரு குறிக்கோளை அடைவதற்கும் அடித்தளம் மனிதனின்  சிந்தனை. எல்லோரும் தான் சிந்திக்கிறார்கள், கடினமாக உழைக்கிறார்கள். கடின உழைப்பாளிகள் , நன்கு யோசித்து முடிவெடுப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுவதில்லை. கடின உழைப்பாளிகளுள், நினைத்த குறிக்கோளை அடைவது மிகச் சிலரே. காரணம், சிந்திக்கும் முறை. குறிக்கோள், உழைப்பு  போன்றவை ஜெயிப்போர் தோற்போர் இருவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், சிந்திக்கும் முறை மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடியது. ஓவியம், எழுத்து போல … Continue reading தலைகீழ் சிந்தனை