நிழல் யுத்தம்

1943-ல் இரண்டாம் உலகப் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருந்தது. வட ஆப்பிரிக்காவைத் தன் வசப்படுத்திய நேச நாடுகள் (Allies), அடுத்ததாக நாஜிக்களின் பிடியிலிருந்த ஐரோப்பாவைக் குறிவைத்தன. ஆப்பிரிக்காவில் இருந்த டுனிசியா (Tunisia) அருகே நிலைகொண்டிருந்த நேச நாடுகளின் படைகள், ஐரோப்பாவிற்குள் நுழைவதற்கான எளிதான வழி இத்தாலியில் இருந்த சிசிலி  (Sicily) தீவு. அந்தத் தீவினை, ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சில் 'அச்சு நாடுகளின் மென்மையான அடிவயிறு' (Soft underbelly) என்று வர்ணித்தார். அங்கே அடித்தால், ஜெர்மனியின் … Continue reading நிழல் யுத்தம்

வால்கெய்ரி

சனநாயகத்தில் அதிகாரம் என்பது மக்களால் வழங்கப்படுகிற ஒரு தற்காலிகப் பொறுப்பு. அதில் அதிகார மாற்றம் என்பது ஒரு சட்டப்பூர்வமான, அமைதியான வழிமுறையாகவே இருக்கிறது. ஒருமுறை அந்த அதிகாரத்தினை இழந்தாலும், திரும்ப அதனை அடைவதற்கான வாய்ப்புகளும் அதிகம் உண்டு. ஆனால், ஒரு சர்வாதிகார ஆட்சியில் அல்லது முடியாட்சியில், அதிகாரம் என்பது ஒரு தனிமனிதனின் வலு சார்ந்தது. அதனை இழப்பது பெரும்பாலும் அந்தத் தனிமனிதனின் வீழ்ச்சியில் மட்டுமே முடிந்திருக்கிறது. தங்களை ஒரு மேலான சக்தியாகக் கருதும் அதே வேளையில், தங்களுக்கு … Continue reading வால்கெய்ரி

பிறர் தர வாரா ?

பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைப் போலவே ஒரு பெரிய பேரரசை உருவாக்க வேண்டும் என்று ஜப்பானுக்கு ஒரு குறிக்கோள் இருந்தது. அதற்காக 20ம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஜப்பான் தனது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், இராணுவத்தை நவீனப்படுத்துவதற்கும் தேவையான முயற்சிகளில் இறங்கியது. இயற்கை வளங்களை சரியாக பயன்படுத்தி, கடல் சார்ந்த வர்த்தக வழிகளை உருவாக்குவதன் மூலம் தங்கள் குறிக்கோளை அடைய முடியும் என்று நம்பினார்கள். ஆனால், ஜப்பானின் சொந்த நிலப்பரப்பில் இரும்பு, நிலக்கரி, எண்ணெய் ஆகிய இயற்கை வளங்கள் இல்லை. ஒரு … Continue reading பிறர் தர வாரா ?

நெறி

வரலாற்றில் இருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு, இரண்டாம் உலகப் போருக்கு நிகரான வேறு ஒரு களஞ்சியம் இல்லையென்று நினைக்கிறேன். கடந்த நூற்றாண்டின் பேரிடரான இதனுடைய ஆவணங்கள் - தனிமனித செயல்பாடு, அரசியல் அமைப்பு, அறிவியல் என்று பல வேறுபட்ட தளங்கள் சார்ந்த நிகழ்வுகளும், தகவல்களும் கொட்டிக் கிடக்கும் அரிய பெட்டகம். அவை அனைத்திலும் மிக முக்கியமானதொரு ஆவணம் - நாஜி படைகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் நேச நாடுகள் (Allies) நடத்திய நியூரம்பெர்க் விசாரணை (Nuremberg Trials). சோவியத் … Continue reading நெறி

ஊழ்

“The Ministry Of Ungentlemanly Warfare” என்ற திரைப்படம் வெகு நாட்களாக எனது வாட்ச் லிஸ்ட்டில் இருந்தது. கய் ரிச்சியின் (Guy Ritchie) திரைப்படங்களுக்கு மிகப்பெரிய ரசிகன் என்றாலும், படத்தின் போஸ்டர் என்னைப் பெரிதாக ஈர்க்காததால், இதனைப் பார்க்காமல் இருந்தேன். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் இதனை பார்க்க நேரம் வாய்த்தது. கய் ரிச்சிக்கே உரித்தான நக்கல், நையாண்டி நிறைந்த கதாபாத்திரங்கள், அற்புதமான ஒளிப்பதிவு, நேர்த்தியான இசை என அட்டகாசமான திரைப்படம். இரண்டாம் உலகப் போரின் போது நிகழ்ந்த … Continue reading ஊழ்

பெயர்ச்சொல்

“சூப்பர் பேரு சார்”. என்று நான் சொன்னதற்கு, “என்ன சார்” என்று புருவத்தை உயர்த்தியவர், சடுதியில் புரிந்து கொண்டு, நெஞ்சில் இருந்த பேட்ஜை தொட்டவாறு, “ஹா..ஹா..ரைட் சார்..நன்றி நன்றி” என்று கண்கள் விரிய முகம் மலர்ந்தார்.  முகம் மலர்ந்தவர், சென்னை விமான நிலையத்தில் இருந்த சி.ஆர்.பி.எஃப் காவலர். பெயர் “பொற்சுடர்”.  தூத்துக்குடி செல்லும் விமானத்திற்காக, எனது போர்டிங் பாஸை ஸ்கேன் செய்யும் போது நடந்த மிகச்சிறிய உரையாடல் அது. அத்தனை அழகான பெயர். பெயர் குறித்த இது … Continue reading பெயர்ச்சொல்

மரங்களைத் தொழுதல்

அன்று காலை அலுவலகத்துக்குச் செல்வதற்காக எப்போதும் போல பெருங்குடி சிக்னலில் நின்றிருந்தேன். வலப்புறம் மெட்ரோ வேலைகளுக்கான கட்டுமானம், இடப்புறம் அப்போல்லோ ஆஸ்பத்திரிக்கு கார் பார்க்கிங்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சர்வீஸ் லேன், பத்திருபது அடி முன்னே, பல ஆண்டுகளாக சீர் செய்யப்படாமல் இருக்கும் கிடங்கு, இவற்றினூடே எனக்கான பச்சை விளக்கு ஒளிர காத்துக் கொண்டிருந்தேன். சிக்னல் பச்சையானவுடன், எம்ஜிஆர் சாலையில் நான் நகரத் தொடங்கி வேகமெடுக்கவும், எங்கிருந்து வந்தார் என்று தெரியாமல், எனக்கு எதிர்ப்புறம் இருந்து ஒரு ஷேர் … Continue reading மரங்களைத் தொழுதல்

யாதும் கேளிர்

மாலை 5.30 மணி இருக்கும். அலுவலகம் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். என் வேலை நாளின் இரண்டு சதவிகித நேரத்தை இரக்கமில்லாமல் தின்று செரிக்கும், காமாட்சி மருத்துவமனை சிக்னலில், பாலத்தின் பக்கவாட்டில் நின்றிருந்தேன். எஃப்.எம்-மில், ஏ...சீமை பூராவும் சுத்தி வரும் காட்டாறு எங்க நின்னாலும் அந்த எடம் என் ஊரு சாதி பாக்காத சனமே என் கூட்டு மோதிப் பாத்தாலே முடிப்பேன் பொலி போட்டு என்று பேரன்புக்குரிய அந்தோணிதாசன் அண்ணன் நொறுக்கிக் கொண்டிருந்தார். “கொஞ்சம் கிடைச்சாலும்…. பங்கு … Continue reading யாதும் கேளிர்

ரெக்கார்ட் டான்ஸ்

“பஞ்சாயத்” என்றொரு வெப் சீரிஸ். வன்முறை, வக்கிரமற்ற ஒரு கிராமப்புற டிராமா. குழப்பமான திரைக்கதை, மூளையை சோர்வடையச் செய்யும் உருவகங்களுக்கு மத்தியில், எம்பிஏ படிக்க ஆசைப்பட்டு, அது கிடைக்காமல், ஒரு கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலாளராக வேலைக்குச் சேரும் கதாநாயகனைச் சுற்றி நடக்கும் லேசான ஒரு கதைக்களம்.  அந்த வெப்சீரிஸில் ஒரு காட்சி. கிராமத்தில் ரெக்கார்ட் டான்ஸ் நடக்கும் போது வரும் பிரச்சனையில், டான்ஸ் ஆடும் பெண்ணிற்கு காயம் பட்டுவிடும். கதாநாயகன் அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று … Continue reading ரெக்கார்ட் டான்ஸ்

ஊர்ச்சாமிகள்

எத்தனை தூரம் விலகி வந்தாலும், நம்மை வேர்களோடு பிணைத்து வைத்திருப்பது ஊரில் இருக்கும் சாமிகள் தான். எத்தனை சாமிகளை வழிபட்டாலும், எத்தனை கோயில்களுக்குச் சென்றாலும் சொந்த ஊரில் இருக்கும் சாமிகளைப் பார்க்கும் போது கிடைக்கும் அமைதியும், சந்தோசமும் வேறு. மற்ற சாமிகள் மேல் பக்தி இருக்கலாம். ஊர்ச் சாமிகள் மீது மட்டும் பக்தியைத் தாண்டிய ஏதோ ஒன்று இருக்கிறது. அது ஊர் மேல் உள்ள பற்றா, சாமியின் மேல் உள்ள நம்பிக்கையா, உறவுகளின் மீதுள்ள பிடிப்பா என்று … Continue reading ஊர்ச்சாமிகள்