லோகேஷும் இசையரசும்

ஏதேனும் ஒரு திங்கட்கிழமை அலுவலகத்திற்கு மட்டம் போட்டு விட்டு, ஊர் சுற்றுதல் எனக்குப் பிடித்தமான ஒன்று. ஊரே அந்த வாரத்திற்கான வேலைகளை இழுக்கத் தயாராக டிராஃபிக் சிக்னல்களில் நின்று கொண்டிருக்கும் போது,  அதனூடே நாம் மட்டும் குறிக்கோளில்லாமல் அலைந்து திரிதல் ஒரு privilege, அது தற்காலிகமானதாக இருந்தாலும் கூட. சரியாகத் திட்டமிட்டு நிதி விடுதலை (Financial Independence) அடைந்தவர்களுக்கு அந்த privilege தினசரி கிடைக்கும். எழுத்தாளர் மார்கன் ஹவுசலின் சொற்களில் - “The ability to do … Continue reading லோகேஷும் இசையரசும்

கொக்கு உகிர் நிமிரல்

நிமிரல் என்ற சொல்லை சங்கப் பாடல்களில் சில இடங்களில் காண முடிகிறது. பெரும்பாலும் இந்தச் சொல் கொக்கு உகிர் நிமிரல் என்ற சொற்றொடரில் வருவதாகத் தான் அமைந்திருக்கிறது. புறநானூற்றில் கவிஞர் திருத்தாமனார், சேரமான வஞ்சனின் சிறப்புகளைக் குறிப்பிடும் பொழுது, அவன் தனக்கு கள்ளும், மான்கறியும் கொடுத்ததாகச் சொல்கிறார். அப்போது கொக்கின் நகம் போல இருக்கும் சோற்றையும் அளித்ததாகக் கூறுகிறார். நிழல்காண் தேறல் நிறைய வாக்கி, யான்உண அருளல் அன்றியும், தான்உண் மண்டைய கண்ட மான்வறைக் கருனை கொக்குஉகிர் … Continue reading கொக்கு உகிர் நிமிரல்

மெலிதல்

1999ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ரகுமான் மற்றும் விந்தியா நடிப்பில் வெளியான படம் சங்கமம். வடிவேலு, மணிவண்ணன் என்று ஏகப்பட்ட நல்ல கலைஞர்கள் இருந்தும் படம் சரியாகப் போகவில்லை. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. பாலச்சந்தரின் சீடர். பாட்ஷா, அண்ணாமலை, சத்யா என்று cult classicக்குகளை எடுத்த இவர் எப்படி ஆளவந்தானையும், பாபா-வையும், சங்கமத்தையும் எடுத்தார் என்பது இன்று வரை புரியாத புதிர். படம் சரியாகப் போகவில்லை. ஆனால், ஏ.ஆர். ரகுமான் இசை, வைரமுத்து வரிகள் என பாடல்கள் … Continue reading மெலிதல்

தூங்கல் வங்கம்

இப்போது வரும் பாடல்களில், பத்தில் ஒன்பதையாவது அனிருத் பாடிவிடுகிறார். Spotify, FM என்று எதைத் தட்டினாலும் அனிருத் மயம்தான். அண்மையில் வெளியான மாவீரன் படத்தில், அவர் பாடிய “சீனா சீனா” என்ற ஒரு பாடல் நன்றாக மனதில் ஒட்டிக்கொண்டு விட்டது. குறிப்பாக அதில் வரும், “அன்னாண்ட அன்னாண்ட வங்கக் கரை இன்னாண்ட இன்னாண்ட கோல்டு பேலஸு" என்ற வரிகள். எழுதியவர் கபிலன். இந்த வரியின் மொத்தத் துள்ளலும் வங்கக்கரை எனும் சொல்லில் தான் அடங்கியிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு … Continue reading தூங்கல் வங்கம்

கெய்சர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் !

சோவியத் யூனியன் உருவாகக் காரணமாய் இருந்த ரஷ்யப் புரட்சிக்கு (1917) முன்னர் அந்நிலப்பரப்பு ஜார்(tsar) மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. மன்னர்களின் பட்டப்பெயரான tsar என்ற சொல் caesar என்ற லத்தீன் மொழிச் சொல்லில் இருந்து மருவி பயன்பாட்டுக்கு வந்தது. ஆங்கிலத்தில் உச்சரிக்கும் போது, நாம் caesar-ஐ சீசர் என்றாலும், லத்தீன் மொழியில் அதன் உச்சரிப்பு கெய்சர் (kaesar) தான். இந்த கெய்சர் எனும் சொல் பண்டைய ரோம் பேரரசை ஆண்ட பேரரசன் ஜூலியஸ் கெய்சர் (Julius … Continue reading கெய்சர் வாழ்ந்து கொண்டிருக்கிறான் !

பாண்டியன் வஞ்சினம்

பஞ்ச் டயலாக் என்றதும் நினைவுக்கு வருவது ரஜினி தான். அதிலும் குறிப்பாக அண்ணாமலை படத்தில் அவர் பேசும் வசனம். சரத் பாபுவை நோக்கி “அசோக்..இது வரைக்கும் நீ இந்த அண்ணமலைய நண்பனாத்தான் பாத்திருக்க" என்று தொடங்கி சவால் விடும் காட்சி, பஞ்ச் டயலாக்குகளின் மாஸ்டர் பீஸ். இது போன்ற வசனங்கள் அனைத்து மொழிப் படங்களிலும் உண்டு. சட்டென நினைவுக்கு வருவது, Taken திரைப்படம். தன் மகளைக் கடத்தியவனிடம், லியம் நீசன் கூறும் - “I dont know … Continue reading பாண்டியன் வஞ்சினம்

வாளுடைமை

தேவர் மகன் படத்தில் சக்தி, மாயனிடம் “உனக்குள்ள முழிச்சிட்டு இருக்க அதே மிருகம் எனக்குள்ள தூங்கிட்டு இருக்கு. அத வீணா எழுப்பிடாத” என்று சொல்வார். நீ செய்கிற அனைத்து தீய செயல்களையும், அக்கிரமங்களையும் என்னால் உனக்குத் திருப்பிச் செய்ய முடியும், ஆனால் அதைச் செய்யாமல் தவிர்க்கிறேன் என்பது தான் அதன் பொருள். அறம் என்பது அதுதான். அசுரன் படத்தில் சிவசாமி தன் மகன் சிதம்பரத்திடம் “அதிகாரத்திற்கு வந்ததுக்கு அப்புறம் அவனுக நமக்கு பண்ணத நீ யாருக்கும் பண்ணாத. … Continue reading வாளுடைமை

கல் பொரு சிறு நுரை

வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனுக்கும் முப்பதுகளில் தன்னை உருமாற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளை வழங்குகிறது என்று நினைக்கிறேன். இன்றைய சூழலில் ஒவ்வொருவரின் சமூக பொருளாதார நிலையைப் பொறுத்து, அந்த வாய்ப்பு ஐந்து பத்து ஆண்டுகள் முன்னரோ பின்னரோ அமையலாம். சராசரி நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மனிதனுக்கு, கல்வி பயின்று, தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டு, குடும்ப வாழ்வில் நுழைந்த பிற்பாடு அந்த வாய்ப்பு பெரும்பாலும் முப்பதுகளில் நிகழ்கிறது.  செய்யும் தொழில், உறவுகள், பொருளாதாரம் சார்ந்து பல சவால்களை நாம் சந்திக்க … Continue reading கல் பொரு சிறு நுரை

டில்லீஸ்வரன்

டில்லீஸ்வரனைப் பற்றி தெரிந்து கொள்ள, முதலில் திருவரங்கம் கோயிலில் உள்ள துலுக்க நாச்சியாரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். டெல்லி, சுல்தான்களின் ஆட்சியின் கீழ் இருந்த போது, அங்கே இருந்த ஒரு சுல்தான் தெற்கு நோக்கிப் படையெடுத்தார். அந்தப் படையெடுப்பின் போது திருவரங்கம் கோயிலைத் தாக்கிய சுல்தானின் படைகள், அங்கே இருந்த பெருமாள் சிலையினை டெல்லிக்கு எடுத்துச் சென்றனர்.  கரம்பனூரைச் சேர்ந்த ஒரு பெண், தினசரி பெருமாளை வணங்கக் கூடிய பழக்கம் உடையவள். இப்படி பெருமாள் சிலையை … Continue reading டில்லீஸ்வரன்

கதார்சிஸ்

ஹ்வாக்கீன் ஃபீனிக்ஸ் (Joaquin Phoneix) ஒரு அற்புதமான கலைஞன். டிகாப்ரியோ, டாம் க்ரூஸ், கிலியன் மர்ஃபி வரிசையில் எனக்கு மிகப்பிடித்தமான நடிகர்களுள் ஒருவர். இத்தனைக்கும் அவர் நடித்த படங்கள் இரண்டை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஒன்று 2000த்தில் வெளியான கிளாடியேட்டர், மற்றொன்று 2019ல் வெளியான ஜோக்கர். இரண்டுமே எதிர்மறையான கதாப்பாத்திரங்கள். அவரது முகஅமைப்பும் உடல்மொழியும், எதிர்மறையான கதாப்பாத்திரங்களுக்கு வெகுவாக ஒத்துப் போகிறது என்று நினைக்கிறேன். அவரது முக அமைப்பில் ஏதோ ஒன்று பழைய நடிகர் ஶ்ரீகாந்தை நினைவுபடுத்தும். இயல்பாகவே … Continue reading கதார்சிஸ்