கல் பொரு சிறு நுரை

வாழ்க்கை, ஒவ்வொரு மனிதனுக்கும் முப்பதுகளில் தன்னை உருமாற்றிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகளை வழங்குகிறது என்று நினைக்கிறேன். இன்றைய சூழலில் ஒவ்வொருவரின் சமூக பொருளாதார நிலையைப் பொறுத்து, அந்த வாய்ப்பு ஐந்து பத்து ஆண்டுகள் முன்னரோ பின்னரோ அமையலாம். சராசரி நடுத்தர வர்க்கத்தை சார்ந்த மனிதனுக்கு, கல்வி பயின்று, தொழில் ஒன்றைக் கற்றுக் கொண்டு, குடும்ப வாழ்வில் நுழைந்த பிற்பாடு அந்த வாய்ப்பு பெரும்பாலும் முப்பதுகளில் நிகழ்கிறது.  செய்யும் தொழில், உறவுகள், பொருளாதாரம் சார்ந்து பல சவால்களை நாம் சந்திக்க … Continue reading கல் பொரு சிறு நுரை

டில்லீஸ்வரன்

டில்லீஸ்வரனைப் பற்றி தெரிந்து கொள்ள, முதலில் திருவரங்கம் கோயிலில் உள்ள துலுக்க நாச்சியாரைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். டெல்லி, சுல்தான்களின் ஆட்சியின் கீழ் இருந்த போது, அங்கே இருந்த ஒரு சுல்தான் தெற்கு நோக்கிப் படையெடுத்தார். அந்தப் படையெடுப்பின் போது திருவரங்கம் கோயிலைத் தாக்கிய சுல்தானின் படைகள், அங்கே இருந்த பெருமாள் சிலையினை டெல்லிக்கு எடுத்துச் சென்றனர்.  கரம்பனூரைச் சேர்ந்த ஒரு பெண், தினசரி பெருமாளை வணங்கக் கூடிய பழக்கம் உடையவள். இப்படி பெருமாள் சிலையை … Continue reading டில்லீஸ்வரன்

கதார்சிஸ்

ஹ்வாக்கீன் ஃபீனிக்ஸ் (Joaquin Phoneix) ஒரு அற்புதமான கலைஞன். டிகாப்ரியோ, டாம் க்ரூஸ், கிலியன் மர்ஃபி வரிசையில் எனக்கு மிகப்பிடித்தமான நடிகர்களுள் ஒருவர். இத்தனைக்கும் அவர் நடித்த படங்கள் இரண்டை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஒன்று 2000த்தில் வெளியான கிளாடியேட்டர், மற்றொன்று 2019ல் வெளியான ஜோக்கர். இரண்டுமே எதிர்மறையான கதாப்பாத்திரங்கள். அவரது முகஅமைப்பும் உடல்மொழியும், எதிர்மறையான கதாப்பாத்திரங்களுக்கு வெகுவாக ஒத்துப் போகிறது என்று நினைக்கிறேன். அவரது முக அமைப்பில் ஏதோ ஒன்று பழைய நடிகர் ஶ்ரீகாந்தை நினைவுபடுத்தும். இயல்பாகவே … Continue reading கதார்சிஸ்

ஷாருக்கானும் பவா செல்லதுரையும்

ஷாருக்கானின் தொழில் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய “The Inner world of Shahrukh Khan” எனும் டாகுமெண்டரி 2004ல் பிபிசியால் தயாரித்து வெளியிடப்பட்டது. 2010 வாக்கில் முதன் முதலில் அதனைப் பார்த்தேன். இந்த 13 வருடங்களில் அதை பல முறை பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த டாகுமெண்டரிகளில் ஒன்று அது. எதைப் பற்றியும் சட்டை செய்யாத, பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஷாருக்கானின் இயல்புக்காக அது எனக்குப் பிடித்திருந்தாலும், நிஜத்துக்கு மிக அருகே அழைத்துச் சென்ற … Continue reading ஷாருக்கானும் பவா செல்லதுரையும்

செப்புகு

பண்டைய தமிழ் இலக்கியங்களில் வடக்கிருத்தல் எனும் தற்கொலைச் சடங்கினைப் பற்றிக் குறிப்புகள் இருக்கின்றன. இந்தச் சடங்கிற்கு “சல்லேகனை” என்று இன்னொரு பெயரும் உண்டு. போரில் புறமுதுகிட்டுத் தோற்றாலோ, தீராத துன்பம், நோய் முதலியவற்றால் அவதியுற்றாலோ சல்லேகனை மேற்கொண்டு உயிர் துறந்திருக்கிறார்கள். வரலாற்றில், இலக்கியத்தில் நமக்கு அறிமுகமான சிலர் இதனை மேற்கொண்டு உயிர் நீத்ததைப் பற்றி வெண்ணிப் பறந்தலை யில் எழுதியுள்ளேன். இதே போல் ஒரு தற்கொலைச் சடங்கு ஜப்பானிலும் இருந்திருக்கிறது. “செப்புகு" என்றழைக்கப்படும் அந்தச் சடங்கினை சாமுராய் … Continue reading செப்புகு

கால் முளைத்த பூ !

“மாற்றான்” படத்தின் அருமையான பாடல்களில் ஒன்று கால் முளைத்த பூவே. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மதன் கார்க்கி எழுதிய பாடல். மெட்டு, பாட்டு என்று இரண்டு தளங்களிலும் மிகவும் கடினமான பாடல் இது. ஜாவேத் அலி மற்றும் மகாலட்சுமி பாடிய இப்பாடலை பதிவு செய்ய மூன்று நாட்களானது என்று ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருப்பார். இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளில் ரஷ்யா தொடர்பான சில சொற்களைப் பயன்படுத்தியிருப்பார் கார்க்கி. வால்கா நதி, பேலே நடனம், கேமாமில் பூ … Continue reading கால் முளைத்த பூ !

பரங்கி

தமிழ் வரலாற்றுப் புத்தகங்களிலும், பாடப் புத்தகங்களிலும் வெள்ளையரை “பரங்கியர்கள்" என்று குறிப்பிட்டு பார்த்திருப்போம். இந்த பரங்கியர் என்ற சொல்லின் வேர் சற்று சுவாரசியமானது. இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள சில நூறு ஆண்டுகள் பின் செல்ல வேண்டும். சிலுவைப் போர்கள் நடந்த காலகட்டத்தில், மேற்கே இருந்து வந்த சண்டையிட வந்த வெளிநாட்டவர்களை பெர்சியர்கள் ஃபாரெஞ்சி (farenji) என்று அழைத்தார்கள். அவர்கள் பிரான்ஸிலிருந்து வந்தவர்கள் என்பதைக் குறிப்பதற்காக இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. வெளி நாட்டில் இருந்து தங்கள் … Continue reading பரங்கி

கிங்ஸ்மேன்- கஷ்மீரியும் பஷ்மீனாவும்

கிங்ஸ்மேன் படங்களில் சீக்ரெட் சர்வீஸ் (2014), கோல்டன் சர்க்கிள் (2017) வரிசையில், 2021ல் “தி கிங்ஸ்மேன்” வெளியானது. இந்தப் படத்தின் கதை, முந்தைய இரு படங்களுக்கும் prequelஆக எடுக்கப்பட்டுள்ளது. கிங்ஸ்மேன் எனும் பிரிட்டிஷ் ரகசிய உளவு அமைப்பு ஏன் உருவானது, அதன் அலுவலகம் ஒரு தையல் கடையில் அமைந்துள்ள பிண்ணனி முதலியவற்றை முதலாம் உலகப் போரின் உண்மை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி முடிந்த அளவு விறுவிறுப்பாக எடுத்துள்ளனர். சில போர்க்கள காட்சிகள், முழுக்க போர் சார்ந்த திரைப்படங்கள் அளவுக்கு … Continue reading கிங்ஸ்மேன்- கஷ்மீரியும் பஷ்மீனாவும்

தலைகீழ் சிந்தனை

எந்த ஒரு பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதற்கும், மனதில் இருக்கும் ஒரு குறிக்கோளை அடைவதற்கும் அடித்தளம் மனிதனின்  சிந்தனை. எல்லோரும் தான் சிந்திக்கிறார்கள், கடினமாக உழைக்கிறார்கள். கடின உழைப்பாளிகள் , நன்கு யோசித்து முடிவெடுப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுவதில்லை. கடின உழைப்பாளிகளுள், நினைத்த குறிக்கோளை அடைவது மிகச் சிலரே. காரணம், சிந்திக்கும் முறை. குறிக்கோள், உழைப்பு  போன்றவை ஜெயிப்போர் தோற்போர் இருவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், சிந்திக்கும் முறை மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடியது. ஓவியம், எழுத்து போல … Continue reading தலைகீழ் சிந்தனை