ஷாருக்கானும் பவா செல்லதுரையும்

ஷாருக்கானின் தொழில் மற்றும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய “The Inner world of Shahrukh Khan” எனும் டாகுமெண்டரி 2004ல் பிபிசியால் தயாரித்து வெளியிடப்பட்டது. 2010 வாக்கில் முதன் முதலில் அதனைப் பார்த்தேன். இந்த 13 வருடங்களில் அதை பல முறை பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த டாகுமெண்டரிகளில் ஒன்று அது. எதைப் பற்றியும் சட்டை செய்யாத, பெரிதாக அலட்டிக் கொள்ளாத ஷாருக்கானின் இயல்புக்காக அது எனக்குப் பிடித்திருந்தாலும், நிஜத்துக்கு மிக அருகே அழைத்துச் சென்ற … Continue reading ஷாருக்கானும் பவா செல்லதுரையும்

செப்புகு

பண்டைய தமிழ் இலக்கியங்களில் வடக்கிருத்தல் எனும் தற்கொலைச் சடங்கினைப் பற்றிக் குறிப்புகள் இருக்கின்றன. இந்தச் சடங்கிற்கு “சல்லேகனை” என்று இன்னொரு பெயரும் உண்டு. போரில் புறமுதுகிட்டுத் தோற்றாலோ, தீராத துன்பம், நோய் முதலியவற்றால் அவதியுற்றாலோ சல்லேகனை மேற்கொண்டு உயிர் துறந்திருக்கிறார்கள். வரலாற்றில், இலக்கியத்தில் நமக்கு அறிமுகமான சிலர் இதனை மேற்கொண்டு உயிர் நீத்ததைப் பற்றி வெண்ணிப் பறந்தலை யில் எழுதியுள்ளேன். இதே போல் ஒரு தற்கொலைச் சடங்கு ஜப்பானிலும் இருந்திருக்கிறது. “செப்புகு" என்றழைக்கப்படும் அந்தச் சடங்கினை சாமுராய் … Continue reading செப்புகு

கால் முளைத்த பூ !

“மாற்றான்” படத்தின் அருமையான பாடல்களில் ஒன்று கால் முளைத்த பூவே. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மதன் கார்க்கி எழுதிய பாடல். மெட்டு, பாட்டு என்று இரண்டு தளங்களிலும் மிகவும் கடினமான பாடல் இது. ஜாவேத் அலி மற்றும் மகாலட்சுமி பாடிய இப்பாடலை பதிவு செய்ய மூன்று நாட்களானது என்று ஹாரிஸ் ஒரு நிகழ்ச்சியில் கூறியிருப்பார். இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளில் ரஷ்யா தொடர்பான சில சொற்களைப் பயன்படுத்தியிருப்பார் கார்க்கி. வால்கா நதி, பேலே நடனம், கேமாமில் பூ … Continue reading கால் முளைத்த பூ !

பரங்கி

தமிழ் வரலாற்றுப் புத்தகங்களிலும், பாடப் புத்தகங்களிலும் வெள்ளையரை “பரங்கியர்கள்" என்று குறிப்பிட்டு பார்த்திருப்போம். இந்த பரங்கியர் என்ற சொல்லின் வேர் சற்று சுவாரசியமானது. இதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள சில நூறு ஆண்டுகள் பின் செல்ல வேண்டும். சிலுவைப் போர்கள் நடந்த காலகட்டத்தில், மேற்கே இருந்து வந்த சண்டையிட வந்த வெளிநாட்டவர்களை பெர்சியர்கள் ஃபாரெஞ்சி (farenji) என்று அழைத்தார்கள். அவர்கள் பிரான்ஸிலிருந்து வந்தவர்கள் என்பதைக் குறிப்பதற்காக இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. வெளி நாட்டில் இருந்து தங்கள் … Continue reading பரங்கி

கிங்ஸ்மேன்- கஷ்மீரியும் பஷ்மீனாவும்

கிங்ஸ்மேன் படங்களில் சீக்ரெட் சர்வீஸ் (2014), கோல்டன் சர்க்கிள் (2017) வரிசையில், 2021ல் “தி கிங்ஸ்மேன்” வெளியானது. இந்தப் படத்தின் கதை, முந்தைய இரு படங்களுக்கும் prequelஆக எடுக்கப்பட்டுள்ளது. கிங்ஸ்மேன் எனும் பிரிட்டிஷ் ரகசிய உளவு அமைப்பு ஏன் உருவானது, அதன் அலுவலகம் ஒரு தையல் கடையில் அமைந்துள்ள பிண்ணனி முதலியவற்றை முதலாம் உலகப் போரின் உண்மை நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி முடிந்த அளவு விறுவிறுப்பாக எடுத்துள்ளனர். சில போர்க்கள காட்சிகள், முழுக்க போர் சார்ந்த திரைப்படங்கள் அளவுக்கு … Continue reading கிங்ஸ்மேன்- கஷ்மீரியும் பஷ்மீனாவும்

பாண்டியன் வெள்ளியம்

சென்னை MRTS மற்றும் மெட்ரோ ரயில் பாலங்களின் தூண்களில் சங்க இலக்கியங்களில் பாடப்பட்ட மாந்தர்களின் படங்கள் வரையப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி சாலையில் விமான நிலையத்துக்குச் செல்லும் மெட்ரோ தூண்களில் இவற்றை அதிகம் பார்க்கலாம். அதில் “பாண்டியன் வெள்ளியம்” என்கிற பெயர் இன்று ஈர்த்தது. யாரென்று தேடிப்பார்க்கையில் புறநானூற்றில் பாடப்பட்டுள்ள பாண்டிய மன்னன் என்று தெரிய வந்தது. சிறப்பு என்னவென்றால், பாண்டியன் வெள்ளியம், சோழ மன்னர் ஒருவரோடு நட்போடு இருந்தது தான். பெரும்பாலும் தீராப்பகையோடு இருந்த சோழ பாண்டிய மன்னர்கள் … Continue reading பாண்டியன் வெள்ளியம்

தலைகீழ் சிந்தனை

எந்த ஒரு பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதற்கும், மனதில் இருக்கும் ஒரு குறிக்கோளை அடைவதற்கும் அடித்தளம் மனிதனின்  சிந்தனை. எல்லோரும் தான் சிந்திக்கிறார்கள், கடினமாக உழைக்கிறார்கள். கடின உழைப்பாளிகள் , நன்கு யோசித்து முடிவெடுப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுவதில்லை. கடின உழைப்பாளிகளுள், நினைத்த குறிக்கோளை அடைவது மிகச் சிலரே. காரணம், சிந்திக்கும் முறை. குறிக்கோள், உழைப்பு  போன்றவை ஜெயிப்போர் தோற்போர் இருவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், சிந்திக்கும் முறை மிகப் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடியது. ஓவியம், எழுத்து போல … Continue reading தலைகீழ் சிந்தனை

வெண்ணிப் பறந்தலை

சோழ மன்னன் கரிகாலனுக்கும், சேர மன்னன் உதியன் சேரலாதனுக்கும் இடையே போர் நடந்த இடம் வெண்ணிப் பறந்தலை எனும் ஊராகும். கழாத்தலையாரும், வெண்ணிக்குயத்தியாரும் பாடி, புறநானூற்றில் (முறையே புறம் 65,66) தொகுக்கப்பட்டுள்ள பாடல்களில், இந்தப் போரைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது.  கழாத்தலையாரின் பாடல், கரிகாலனின் வெற்றியையும் அதனைத் தொடர்ந்து சேரலாதன் வடக்கிருந்து உயிர் நீத்ததையும் குறிப்பிடுகிறது. தோற்ற சேரன் ஏன் வடக்கிருந்து உயிர் நீத்தான் என்பதைத் தெரிந்து கொள்ளும் முன்னர், வடக்கிருத்தல் எனும் பண்டைய மரபைப் பற்றிப் … Continue reading வெண்ணிப் பறந்தலை

கடிமரந் தடித்தல்

தமிழ்ச் சமூகத்தில் மரங்களைப் போற்றிப் பாதுகாக்கும் மரபு சங்ககாலம் தொட்டே இருந்து வந்திருக்கிறது. குறிப்பாக, வேந்தர்களும், மன்னர்களும் மரங்களைத் தங்கள் குலக்குறியாகவும், மானம் மற்றும் வீரத்தின் அடையாளமாகவும் கருதியிருக்கின்றனர். தங்கள் முன்னோரும், குலதெய்வங்களும் இம்மரங்களில் உறைந்திருப்பதாக நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆகையால், இம்மரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து, தீங்கு வராமல் பாதுகாத்தனர். இவை காவல் மரங்கள் அல்லது கடி மரங்கள் என்று அழைக்கப்பட்டன.   சேர, சோழ, பாண்டிய வேந்தர்கள் முறையே பனை, அத்தி மற்றும் வேம்பு ஆகியவற்றை தங்கள் … Continue reading கடிமரந் தடித்தல்

பெருஞ்சோற்றுதியன்

உதியன் சேரலாதன் எனும் சேர மன்னனின் பெருமையைக் கூறும் புறநானூற்றுப் பாடலில்(புறம் 2), அவன் பெருஞ்சோறு அளித்த நிகழ்வானது எடுத்துச் சொல்லப்படுகிறது. இதனால் பாடப்பட்டோன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் ஆகிறான். பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் ! சேரலாதன் என்பதை சேரல் + ஆதன் என்று பொருள் கொளல் வேண்டும். சேர வேந்தனான ஆதன் என்று பொருள்படும். ஆதன் எனும் சேரமன்னனின் வழி வந்தவர்கள் சேரலாதன் எனும் குடிப்பெயரைக் கொள்வார்கள் என்று விளங்கிக் கொள்ளலாம். உதியன் என்பது … Continue reading பெருஞ்சோற்றுதியன்